Tuesday, June 18, 2019



Saturday, August 25, 2012

மூலிகை வீட்டுத் தோட்டம்

விபூதி பச்சிலை, முடக்காத்தான், கீழாநெல்லி, கருந்துளசி, அருகம்புல், லெமன்கிராஸ், ஒமம்.

ஜெயா சுந்தரம் , சென்னை - 9710872854

Friday, January 14, 2011

வீட்டு மூலிகைத் தோட்டம்



வீட்டு மூலிகைத் தோட்டம் மற்றும் இயற்கை வைத்தியம் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். இந்நாளில் மக்களிடையே ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நாம் ஆரோக்கியமாகவும் எந்த நோயும் நம் உடலை தாக்கா வண்ணமும் இருக்கவும் மக்கள் அதற்கரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை படிப்பதன் மூலம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும் மூலிகை மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் மூலம் நோயற்ற வாழ்விற்கு மூலிகைகள் எப்படி பயன்படுகிறது என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



1. கீரைகள் 9. செம்பருத்தி 16. ஆடுதோடா இலை, மரம்
2. துளசி 10. முருங்கை கீரை 17. வேப்பிலை மரம்
3. தூதுவளை 11. பப்பாளி மரம் 18. புங்கை மரம்
4. புதினா 12. வெங்காயம் 19. மா மரம்
5. கொத்தமல்லி 13. நொச்சித் தலை 20. வாழை மரம்
6. வல்லாரை 14. இஞ்சி
7. கற்பூரவல்லி 15. பூண்டு
8. கருவேப்பிலை.


பலவகையான வைட்டமின் தரும் கீரைகள்

  1. வாய்ப்புண் : மணத்தக்காளி கீரையைப் பருப்புடன் சமைத்து பகல் உணவுடன் சாப்பிடவும். அரை டம்ளர் பால் பருகவும்.
  2. நாக்கில் இரணம் : கடுக்காய் தோலை சிறிது வாயில் அடக்கி வைத்துக் கொண்டால் இரணம் ஆறி விடும்.
  3. வாய் நாற்றம் : புதினாத் துவையல் உண்டால் நீங்கும். வெந்நீரில் சிறிது எலுமிச்சை ரசத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.
  4. தொண்டைப் புண், தொண்டை வலி : ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்ச பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மூன்று நாட்கள் பருகவும். இதை தொடர்ந்து 40நாட்கள் பருகினால் டான்சில்ஸ் குணமாகும்.
  5. தொண்டைக் கட்டு : சீரக கஷாயத்தில் தேன் விட்டுக் குடிக்கவும்.
  6. பல்லில் மஞ்சள் கறை : உமிக்கரியும், உப்பும் சேர்த்து பல் துலக்க வேண்டும். பல் வெண்மையாக மாறும். 
  7. பல் கூசுதல் : இஞ்சி கஷாயத்தில் தேன் விட்டுக் குடித்து வந்தால் பல் கூச்சம் மாறும்.
  8. பல்வலி : ஒரு டம்ளர் நீரில் மூன்று பூண்டுப் பற்களை பொடிசெய்து நீரில் இட்டு மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்

விதைத்தல் மற்றும் நடவு செய்தல்

நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

Source: www.indg.in

வீட்டு காய்கறி தோட்டம்

முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாக தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களிமண் இல்லாத பட்சத்தில் ஓ.கே. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.

உங்கள் தோட்டத்தை நீங்களே டிசைன் செய்யலாம். ஒரு சிறிய இடத்தில் ""நாற்றங்கால்'' என குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாற்றங்காலில்தான் வெண்டை, மிளகாய், கத்தரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 நாட்களை கழிக்கப் போகின்றன. இதுதான் உங்கள் காய்கறி பயிரின் குழந்தை பருவம். நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ.மீ. வளர்ந்தபின் சிறிய இடைவெளி விட்டு பிடுங்கி நட்டுவிடலாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வித்தியாசப்படும். வீட்டு தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக கீரை என்று எடுத்துக்கொள்வோம். நாற்றங்கால் பெரிதாக தேவையில்லை. 25 முதல் 30 நாளில் வீட்டு தோட்டத்தில் கீரை ரெடி. கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை. எறும்புகள் தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். தேவைப்பட்டால் கடலை புண்ணாக்கு + வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம். உங்களுக்கு எந்த கீரை வகை பிடிக்கிறதோ அதை நீங்கள் வீட்டு தோட்டத்தில் நடலாம்.

வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி இவை பொதுவாக ஒரே வயதுடைய காய்கறி பயிர். இடைவெளி விட்டு நட்டு பயன்பெறலாம். இவைகள் 45 முதல் 120 நாள் வரை காய்கள் தரும். பூச்சி தொல்லை இருப்பின் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நல்லது. காய்கறி விதைகளை கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறி செடிகளை வளர்ப்பதற்காக தற்போது கன்டெய்னர்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தலாம்.

புடலங்காய், பாகற்காய் இவையெல்லாம் படரும் தாவரம். எனவே படர்வதற்கு பந்தல் தேவை. கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல் அமைக்கலாம். உங்கள் வீட்டின் வசதியை பொறுத்து படரும் தாவர காய்கறி வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பழைய சாக்கு, உபயோகமற்ற டிரம் இவற்றில் மண் நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம். ஏன் மாமரம், கொய்யா கூட வளர்க்கலாம்.

உங்கள் வீட்டு மண் பொலபொல தன்மைஉடையதா?, சேனைகிழங்கு வளர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான உரத்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். எப்படி என கேட்கிறீர்களா? வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய குழி (30 செ.மீ. ஆழத்தில்) எடுத்து தினமும் வீட்டில் கிடைக்கும் குப்பைகளை அதில் கொட்டுங்கள். 90-120 நாளில் நன்கு மக்கிய இயற்கை உரம் தயார். உங்கள் வீட்டு தோட்டத்தில் வளரும் காய்கறிகள் இயற்கையானதும், விஷமற்றதும் என்பது மட்டுமல்லாமல் உங்கள் காய்கறி தோட்டம் உங்களுக்கு ஒரு உடற்பயிற்சிகூடம் என்பதையும் மனதில் 

வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட யோசனை

 மாடி வீடு  அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில்,   இருக்கும் கொஞ்ச  இடத்திலும் நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும்  குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும்.  கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.



வீட்டில் மண்தரையில் செடிகள் போட இடம் இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நிலையில் உள்ள பிளாஸ்டிக் சாக்கே போதுமானது.  தொட்டிகளை வாங்கியதும் அதில் தண்ணீர் தெளித்து ஓர் நாள் முழுவதும் ஊற விடுங்கள். சாக்கை வெளி பக்கமாக நன்கு சுருட்டி அல்லது மடித்து பாதி சாக் அளவு  ரெடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைப்பது இல்லை. ஆகவே நீங்கள் எடுக்ககூடிய மண்ணையும் வளபடுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டு விட்டு அதனுடன் காய்ந்த சாணம் (இல்லை என்றாலும் பரவாயில்லை ) கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள். 

வேப்பமரம் வீட்டின் அருகில் இருந்தால் அதன் இலைகளை (காய்ந்த அல்லது பச்சை) முடிந்தவரை சேகரித்து தொட்டி , சாக்கில் பாதி அளவு போடுங்கள் அதன்பின் மண்ணை
போட்டு நிரப்புங்கள்.  இலை அப்படியே மக்கி உரமாகி விடும் மற்ற இலைகளும் போடலாம் ஆனால் வேப்பிலை மிக மிக சிறந்தது.  இதன் கொட்டைகளை சேகரித்து உடைத்து தூளாக்கி  போடலாம், வேறு வேதி உரங்கள் ஏதும் தேவை இல்லை.  செடிகளும் நன்கு செழித்து வளரும்.

இப்போது நமக்கு மிகவும் அவசியமான செடிகளை பற்றி மட்டும் பாப்போம். தக்காளி, கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தனியாக தேடி போக வேண்டாம் என்பது ஒரு வசதி. 

புதினா, கீரை  ---------- நாம் உபயோகித்தது போல் மீதம் இருக்கும் அந்த தண்டுகளை மட்டும் சேகரித்து நல்லதாக பார்த்து எடுத்து அதை அப்படியே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும் .கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் , பின் தண்ணீர் தெளித்து விடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையையும் இந்த முறை படி வளர்க்கலாம். 

கொத்தமல்லி--  வாங்கும் மல்லி வேருடன் இருந்தால் மீண்டும் தளிர்க்க  வைக்க முடியும் , கட் பண்ணி எடுத்தது போக இருக்கும் வேர் பகுதியை அப்படியே மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். பின் தண்ணீர்  விடுங்கள். தண்டு கீரையை  வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் மறுபடி வளர்க்க முடியும்.

தக்காளி,கத்தரி,பாகை --------- கடையில் காய்கறி வாங்கும்  போதே இரண்டு அல்லது மூன்றை நன்கு  பழுத்ததாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பின் அதன் தோலை எடுத்து விட்டு விதைகளை மட்டும் ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.   சாணி கிடைத்தால் அதை தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை ஒரு நாள் ஊற வைத்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பரவாயில்லை.

பிறகு தக்காளி, கத்தரி விதைகளை கொஞ்சம் எடுத்து அப்படியே தொட்டியில் விதைத்து விடுங்கள்.  கொஞ்சம் வளர்ந்த பின்னர் தனியாக கன்றுகளை எடுத்து சாக்கு, தொட்டியில் நட்டு  விடுங்கள், தண்ணீர் விடுங்கள் . அவ்வளவுதான்.

பச்சை மிளகாய்க்கு, மிளகாய் வற்றலில் இருந்து விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது மழை காலமாக இருப்பதால் செடிகளை நட இதுவே உகந்த  நேரம். வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.